திங்கள், 28 ஏப்ரல், 2014

வெந்தயக் குழம்பு


தேவையான பொருட்கள்:


வெந்தயம் - மூன்று டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் - ஐந்து
பச்சை மிளகாய் - ஒன்று
பெருங்காயம் - மூன்று சிட்டிகை
பெரிய வெங்காயம் - ஒன்று
தாளிக்கும் கடலை பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
கடுகு - தாளிப்பதற்கு
புளி - பெரிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
  • புளியை மூன்று டம்ளர் சுடு நீரில் ஊற வைத்து கரைத்துக்கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காயிந்ததும் கடுகு போட்டு பொறிந்ததும் கடலை பருப்பு சேர்க்கணும்.
  • கடலை பருப்பு சிவந்ததும் பெருங்காயத்தை பொரிய விடனும்.
  • வெந்தயம் சேர்த்து லேசாக வதக்கணும்.
  • வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி மிளகாய் வற்றல் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கரைத்து வைத்துள்ள புளியை சேர்க்கணும்.
  • உப்பு சேர்த்து கொதிக்க விடனும்.
  • நன்றாக கொதித்து எண்ணெய் குழம்பின் மேல் தெரிந்தவுடன் இறக்கவும்.
குறிப்பு:

*பெரிய வெங்காயத்திற்கு பதிலாக சின்ன வெங்காயம் அல்லது முருங்கைக்காய்சேர்த்தும் செய்யலாம்.
*வெந்தயத்தை கருகாமல் கவனமாக வதக்க வேண்டும் இல்லாவிட்டால் ருசி மாறிவிடும்.
*இந்த குறிப்பிட்ட குழம்பிற்கு கீரை மசியல் மிக நன்றாக இருக்கும்.
*இந்த குழம்பிற்கு பொடிகள் எதுவும் சேர்க்க கூடாது.

வியாழன், 24 ஏப்ரல், 2014

மாம்பழ கார குழம்பு



தேவையான பொருட்கள்:
=========================
பழுத்த மாம்பழம் - ஒன்று
புளி - எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் - அரை கப்
பச்சை மிளகாய் - பன்னிரண்டு
மிளகாய் தூள் - இரண்டு  டீஸ்பூன்
தக்காளி - நான்கு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - கால் கப்
கடுகு - கால் டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - கால் கப்

எண்ணையில்லாமல் வறுத்து பொடிக்க:
=====================================
வெந்தயம் - கால் டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
அரிசி - ஒரு டீஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்

செய்முறை:
============
* வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக நறுக்கவும்.

* வறுத்து பொடிக்க வேண்டியத்தை பொடித்து வைத்து கொள்ளவும்.

* பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மாம்பழத்தை தோலுடன் பெரிது பெரிதாக நறுக்கவும்.

* புளியை இரண்டரை கப் சுடு நீரில் கரைத்து கொள்ளவும்.

* தக்காளியை நீர் விடாமல் ஒன்றும் பாதியுமாக அரைத்து அதில் சிறிது உப்பு மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து கலந்து புளி நீரில் சேர்த்து கலக்கவும்.

* எண்ணையை காயவைத்து கடுகு,வெந்தயம்,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் சிவக்கும் வரை வதக்கவும்.

* புளி கரைசலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் மாம்பழ துண்டுகள் சேர்த்து உப்பு சரி பார்த்து தணலை நடுத்தரமாக வைக்கவும்.

* எல்லாம் ஒன்று சேர்ந்து கொதித்து எண்ணெய் கக்கியதும் பொடித்த பொடி தூவி ஒரு நிமிடம் கிளறி இறக்கவும்.


குறிப்பு:
=======

மாம்பழம் சேர்த்து செய்வதால் இனிப்பாக இருக்குமென்று நினைக்க வேண்டாம்.காரமும்,புளிப்பும் சேர்ந்து அருமையாக இருக்கும்.காண்டிப்பாக அனைவரும் செய்து பார்க்க வேண்டிய ஒரு கார குழம்பு.காரம் கூட குறைய சேர்த்து கொள்ளலாம்.

சனி, 19 ஏப்ரல், 2014

முருங்கக்காய் கார குழம்பு (செட்டிநாடு)


தேவையான பொருட்கள்:
========================

புளி - எலுமிச்சை அளவு
முருங்கக்காய் துண்டுகள் - பத்து
சின்ன வெங்காயம் - பத்து
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்
தக்காளி - ஒன்று அல்லது இரண்டு
பச்சை மிளகாய் - நான்கு
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - ஐந்து (optional)
நல்லெண்ணெய் - இரண்டு குழிகரண்டி +அரை  குழிகரண்டி
கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன்

அரைக்க:
========
சோம்பு பொடி - கால் டீஸ்பூன்
தேங்காய் துறுவல் - கால் கப்
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
சாம்பார் பொடி - ஒன்று அல்லது இரண்டு  டீஸ்பூன்
தனியா பொடி - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஐந்து இலை

செய்முறை:
=============

* வெங்காயத்தை தோலுரித்து கொள்ளவும்,

* பச்சை மிளகாயை கீறி கொள்ளவும்.

* புளியை மூன்று கப் நீரில் கரைத்து கொள்ளவும்.

* அரைக்க வேண்டியதை அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

* பாத்திரத்தில் இரண்டு குழிகரண்டி  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மிளகாய் வற்றல்,பச்சை மிளகாய் சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து பொறிய விடவும்.

* சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி முருங்கக்காய் சேர்க்கவும்.

* உப்பு சேர்த்து தக்காளி ,மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

* பச்சை வாசனை போனதும் அரைத்த விழுதை சேர்த்து ஒரு கொத்தி வந்ததும் மீதும் உள்ள எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து எண்ணெய் கக்கும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.

* சுவையான கார குழம்பு தயார்.
குறிப்பு:
=======

உங்கள் நாவிற்கு தகுந்தாற்போல் காரத்தை கூட குறைத்து போட்டு கொள்ளுங்கள்.
சின்ன வெங்காயம் உரிக்கும் பொழுது கண் எறியாமல் இருக்க ஒரு பத்து நிமிடம் முன்பு தண்ணீரில் ஊற போட்டு விடுங்கள்.எளிதாக தோல் நீக்கிவிட முடியும் அதே சமயம் கண் எறியாது.
உங்கள் கருத்துக்களை மறக்காமல் சொல்லவும்.

புதன், 16 ஏப்ரல், 2014

குறிப்புகள்



 

 பால் கெடாமல் இருக்க...

பால் வைக்கும் பாத்திரம் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்போதுதான் பால் கெடாமல் இருக்கும். பாலுடன் இரண்டொரு நெல் மணிகளைப் போட்டு வைத்தால், காலையில் கறந்த பால் இரவு வரை கெடாமல் இருக்கும்.



சமையல் குறிப்புகள் - அரிசி குருணையில் உப்புமா செய்தால் ...



அரிசி குருணையில் உப்புமா செய்தால், குருணை பாதி வெந்து கொண்டிருக்கும்போது, சம அளவு வறுத்த சேமியாவைக் கொட்டி வெந்ததும் இறக்கி வைத்து, அரைமூடி எலுமிச்சம்பழம் பிழியவும். இந்த டூ-இன்-ஒன் உப்புமா, புதுமையான சுவையோடு இருக்கும்.

சமையல் குறிப்புகள் - மோர் மிளகாய் தயாரிக்கும்போது...



மோர் மிளகாய் தயாரிக்கும்போது அத்துடன் பாகற்காய்களையும் வில்லைகளாக அரிந்து போட்டு வற்றலாக்கலாம். பாகல் வற்றல் காரமுடனும், மிளகாய் சிறு கசப்புடன் சுவை மாறி ருசியாக இருக்கும்.

சமையல் குறிப்புகள் - காய்கறிகள் நறுக்கத் தொடங்குமுன்...
காய்கறிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை நறுக்கத் தொடங்குமுன் கைவிரல்களில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்குவது நல்லது. வேலை முடிந்ததும் சிகைக்காய் போட்டுக் கழுவி விடவும். விரல்கள் கறுத்துப் போகாமல் இருக்க இது உதவும்.

சமையல் குறிப்புகள் - கிரேவி வகையறாக்கள் செய்யும்போது ...
 கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும்.

சமையல் குறிப்புகள் - காய்கறிகளில கசப்பு சுவை நீங்க...
 காய்கறிகளில் சில காய்கள் கசப்பு சுவையுள்ளவை. அவற்றை நறுக்கி அரிசி களைந்த நீரில் சற்று நேரம் போட்டு வைத்தால் கசப்பு நீங்கிவிடும்.

சமையல் குறிப்புகள் - இட்லி மிருதுவாக இருக்க...

 இட்லிக்கு உளுந்தைக் குறைத்து, கெட்டியாக அரைத்து வார்க்கும்போது சிறிது நல்லெண்ணெய் விட்டுக் கொண்டால், இட்லி மிருதுவாக இருக்கும். இரண்டு தினங்களுக்குக் கெடாமல் இருக்கும். பிரயாணங்களுக்கு உகந்தது.

சமையல் குறிப்புகள் - இட்லி மணமாக இருக்க...

காய்ந்து போன கறிவேப்பிலை, கொத்துமல்லி இலைகளை இட்லிச் சட்டி நீரில் போட்டு இட்லிவேக வைத்தால் இட்லி மணமாக இருக்கும்.

சமையல் குறிப்புகள் - ஜவ்வரிசி கிளரும்போது...

ஜவ்வரிசி அல்லது அரிசிக்கூழ் கிளரும்போது கசகசாவையும் ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டுக் கிளறி வடாம் அல்லது வற்றல் தயாரித்தால் பொரிக்கும்போது தனி மணமும், ருசியும் காணலாம்.


சமையல் குறிப்புகள் - எண்ணெய்க் காறலை போக்க...

எண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.

சமையல் குறிப்புகள் - தயிர் புளிக்காமல் இருக்க...

தயிர் புளித்துவிடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் புளிக்காது.


சமையல் குறிப்புகள் -  வெண்டைக்காய் சமைக்கும்போது...


வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.


சமையல் குறிப்புகள் - அரிசி உப்புமா செய்யும்போது...

அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.

சமையல் குறிப்புகள் - கீரையை வேகவிடும்போது ...

 கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.
சமையல் குறிப்புகள் - குழம்பில் தேங்காய் பயன்படுத்தும்போது..

தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ·பிரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.


சமையல் குறிப்புகள் - வெங்காய அடை செய்யும் போது...


வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீருற வைக்கும்.


சமையல் குறிப்புகள் - பூரிக்கு மாவு பிசையும்போது ...


பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

சமையல் குறிப்புகள் - அடை செய்யும்போது ...

அடை செய்யும்போது கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ரம்யமாக இருக்கும்.

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

தேங்காய் பால் - அன்னாசி ஜூஸ்



தேவையான பொருட்கள் :

அன்னாசி பழம் - பாதி 
ஐஸ் கட்டிகள் – 5 
தேங்காய் பால் – 1 கப் 
தேன் – ருசிக்கு ஏற்ப 

செய்முறை 

• அன்னாசி பழத்தின் தோல் நீக்கி துண்டுகளாக வெட்டவும். 

• வெட்டிய அன்னாசி பழத்துடன் ஐஸ்கட்டி, தேன், 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு மிக்சியில் அடித்து வடிக்கட்டி மீண்டும் மிக்சியில் இட்டு தேங்காய் பால் சேர்த்து நல்ல நுரை பொங்க அடித்து ஜூஸ் டம்ளரில் ஊற்றி குடிக்கவும். 

• சூப்பரான தேங்காய் பால் - அன்னாசி ஜூஸ் ரெடி. 

புதன், 9 ஏப்ரல், 2014

சௌ சௌ கூட்டு



தேவையான பொருட்கள்:
========================

சௌ சௌ - இரண்டு
பாசி பருப்பு - அரை கப்
பச்சை மிளகாய் - பத்து
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்
உப்பு  - தேவையான அளவு
மிளகாய் வற்றல் - இரண்டு
தக்காளி - ஒன்று
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

கால் டீஸ்பூன் எண்ணையில் வறுத்து பொடிப்பதற்கு :
================================================

மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்

தாளிப்பதற்கு:
----------------------

தேங்காய் எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - ஒரு டீஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
 தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:
===========

* சௌ சௌவை தோல் சீவி சின்ன சின்ன சதுரங்களாக நறுக்கி கொள்ளவும்.

* தக்காளியை நான்கு துண்டுகளாகி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் நருக்கிய சௌ சௌ,தக்காளி,கீறிய பச்சை மிளகாய்கள் ,கறிவேப்பிலை,உப்பு,மிளகாய் வற்றல் மஞ்சள் தூள் சேர்த்து எல்லாம் மூழ்கும் அளவு நீர் சேர்த்து பருப்பு வேகும் வரை கொதிக்க விடவும்.

* நீர் வற்ற வற்ற சேர்த்து கொள்ளவும்.

* பருப்பு வெந்ததும் கூட்டிற்கு தேவையான நீர் சேர்த்து கொதிக்க விடவும்.

* ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தாளிப்பதை தாளித்து கூட்டில் கொட்டவும்.

* மிளகு சீரக பொடியை சேர்த்து இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.

* தேங்காய் வறுத்து சேர்ப்பதால் நல்ல மணமாக இருக்கும் இந்த கூட்டு.

திங்கள், 7 ஏப்ரல், 2014

அல்வா செய்வது எப்படி?



                                                         
             


இன்று நம்ம ஊர் ஸ்பெஷலான அல்வா செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்....
தேவையான பொருள்கள்:
சம்பா கோதுமை – 200 கிராம்
சர்க்கரை – 750 கிராம்
நெய் – 400 கிராம்
முதலில் சம்பா கோதுமையை எடுத்து நன்றாக சுத்தம் செய்த பின் , தண்ணீரில் முதல் நாளே ஊறவைக்க வேண்டும். பின்பு கிரைண்டரில் நல்ல நைசாக அரைக்க வேண்டும். அது நன்றாக அரைக்க அரைக்க கோதுமை பாலாக வர ஆரம்பிக்கும். அதன் பின் அதை ஒரு துணியில் வடிகட்ட வேண்டும். அந்த பாலை நல்ல கனமான வாணலியில் சூடாக்க வேண்டும். பால் லேசாகச் சூடானதும், சர்க்கரைச் சேர்த்துக் கிளற ஆரம்பிக்க வேண்டும்.
அதன் பின் கலவை கொதித்து, இறுகி, கெட்டியான பதத்திற்கு வரும்போது, சுத்தமான நெய்யைச் சேர்த்துக் கிளற வேண்டும். இறுதி வரை நாம் அந்த கலவை விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். சிறிது நேரத்தில் அல்வா நல்ல குங்குமச் சிவப்பு நிறமாக மாறும். அல்வா நன்கு இறுகலான பக்குவத்தில், மற்றும் பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரத்தி, ஆறவைத்தவுடன் சுவையான அல்வா ரெடி ஆகிவிடும் !

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

நெய் மைசூர் பாக்




தேவையான பொருட்கள்:
========================

கடலை மாவு - ஒரு கப்
சர்க்கரை - இரண்டு கப்
நெய் - ஒண்ணேகால் கப்
முந்திரி பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்
அரை கப் - நீர்

செய்முறை:
===========

* கடலை மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து  வறுத்து வைக்கவும்.

*  சர்க்கரையை நீர் சேர்த்து கலந்து பாகு தயாரிக்கவும்.

* பாகின் பதம் பார்க்க சிறிது  பாகை எடுத்து அதை குட்டி பந்து போல் உருட்ட முடிந்தால் அதுவே சரியான பதம்.

* மெது மெதுவாக மாவை சேர்த்து கட்டி உருவாகாமல் கலக்கவும்.

* ஒன்று சேர்ந்ததும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் எடுத்து வைத்து மீதம் உள்ள நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கலக்கவும்.

* slow flame மில் வைத்து கிளறவும்.

* தனியாக எடுத்து வைத்த நெய்யை ஒரு பாத்திரத்தில் முழுவதும் படுமாறு தடவவும்.

* கிளறிய பாகை நெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி சமமாக பரப்பி விடவும்.

* நன்றாக ஆறியதும் வேண்டிய வடிவத்தில் துண்டுகள் போடவும்.

* சுவையான நெய் மைசூர் பாக் தயார்.


குறிப்பு:
=======

சர்க்கரை பாகின் பதம் சரியாக வரவில்லை என்றாலோ,மாவு சரியாக இல்லைஎன்றாலோ சுவையும் பதமும் சரியாக வராது.முதன் முறையாக செய்கிறீர்கள் என்றால் மிகவும் சிறிய அளவில் செய்து பார்க்கவும்.