வெள்ளி, 23 மே, 2014

முங்க்தால் வடை(பாசிபருப்பு வடை)


தேவையான பொருள்கள்:
========================
பாசி பருப்பு - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் பொடி-கால் டீஸ்பூன்
தனியா பொடி - கால் டீஸ்பூன்
மல்லி இலை- சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு


செய்முறை:

=============
  • பாசி பருப்பை மூன்று மணி நேரம் ஊற விடவும்.
  • பிறகு தண்ணீரை நன்றாக வடித்து கரகரப்பாக அரைக்கவும்.
  • அரைத்த விழுதுடன் உப்பு,மிளகாய் தூள் ,மல்லி பொடி,கொஞ்சம் ஜீரகம் ,மல்லி இலை சேர்த்து பிசையவும்.
  • எண்ணெயை காய வைத்து மாவை சிறிய சிறிய அளவில் கிள்ளிப் போட்டு குறைந்த தீயில் பொரித்து எடுக்கவும்.


வியாழன், 22 மே, 2014

பீட்ரூட் ஹல்வா



தேவையான பொருட்கள்:
----------------------------------
பீட்ரூட் (துருவியது) - ஒரு கப்
பச்சை பால் - இரண்டு கப்
சர்க்கரை (அல்லதுசுகர் ப்ரீ - அரை கப்
நெய் - நான்கு டேபிள்ஸ்பூன்
முந்திரி - ஒரு டீஸ்பூன்

செய்முறை:
------------------
*ஒரு அடி கனமான பாத்திரத்தில் கொடுத்துள்ளவற்றில் பாதி அளவு பால் விட்டுகாய்ந்ததும் பீட்ரூட் சேர்த்து மீதம் உள்ள பால் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்துநன்கு வேக விடனும்
*நன்றாக வெந்ததும் பால் வற்றி இரண்டும் சேர்ந்து கொதிக்கும்..
*கிளறிக்கொண்டே இருக்கணும்.
*கொஞ்சம் கெட்டி ஆக ஆரமித்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து எல்லாம்ஒன்று சேரும் வரை கிளறனும்.
*அல்வா பதம் வர ஆரமித்ததும் சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறிக்கொண்டேஇருக்கணும்.
*துருவிய முந்திரி மற்றும் தேவைப்பட்டால் ஒரு பின்ச் சினமன் பௌடர் சேர்த்துஇறக்கவும்.
*டேஸ்டி ஹல்வா ரெடி.

பாகற்காய் பிட்லை



தேவையான பொருட்கள்:
----------------------------------

வேக வைக்க:
============
துவரம் பருப்பு - அரை கப்
கடலை பருப்பு - அரை கப்
நிலக்கடலை - கால் கப்
எண்ணெயில் வறுத்து அரைக்க:
===========================
தனியா - ஒரு கைப்பிடி
கடலை பருப்பு - அரை கைப்பிடி
உளுந்து - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய் வத்தல் - ஏழு
பெருங்காயம் - சிறிதளவு
தேங்காய் - அரை கப்
தக்காளி - இரண்டு

புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
மல்லி இலை - சிறிதளவு
வெந்தயம் - சிறிதளவு
கறிவேப்பிலை - தாளிக்க
பாகற்காய் - ஒரு கப்(நறுக்கியது)

செய்முறை:
============
*முதலில் வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை
தேங்காய் தக்காளி தவிர )இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெயில் வறுத்து தேங்காய் ,தக்காளி சேர்த்து அரைத்து எடுக்கவும்.

*பருப்புகளை குழைய வேக வைத்து எடுக்கவும்.

*வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,சிறிது வெந்தயம் தாளித்துபாகற்காய் சேர்த்து உப்பு சேர்த்து புளி தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும்.

*காய் வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து தேவையான் அளவு நீர் சேர்த்துநிலக்கடலை சேர்த்து கொதிக்க விடவும்.

*கொதி வந்ததும் வேக வைத்த பருப்பை சேர்த்து கிளறி நுரைத்ததும் மல்லி இலைதூவி பரிமாறவும்.

*கடைசியில் விருப்பபட்டால் சிறிது தேங்காய் எண்ணெயை காயவைத்து அதில்கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.
*சுவையான பிட்லை ரெடி

குறிப்பு:
=======
இதனை சாதத்துடன் பிசைந்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.இதற்க்கு பக்கஉணவாக பொரித்த அப்பளம் சூப்பராக இருக்கும்.

வெள்ளி, 16 மே, 2014

அக்காரவடிசல்(கோவில்களில் செய்யும் முறை)




தேவையான பொருட்கள்:
***************************
தண்ணீர் சேர்க்காத பால் - நாற்பது டேபிள்ஸ்பூன்.
அரிசி - ஒரு டேபிள்ஸ்பூன்
நெய் - ஆறு டேபிள்ஸ்பூன்
வெல்லம் - மூன்று டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - இரண்டு டேபிள்ஸ்பூன்
பிஸ்தா பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
முத்திரி - நான்கு டீஸ்பூன்

செய்முறை:
*************

முதலில் அடுப்பில் பால் மற்றும் அரிசியை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

@ நன்றாக கொதித்து வற்றி தக்காளி பதம் வந்ததும் மூன்று டேபிள்ஸ்பூன் நெய்மற்றும் வெல்லம்,சர்க்கரை,முந்திரி,பிஸ்தா சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம்நன்றாக கிளறவும்.

மீதம் உள்ள நெய்யை ஊற்றி கிளறி கேசரி பதம் வதும் நெய் தடவிய
தட்டில் இட்டு சமமாக பரப்பி ஆறியதும் விருப்பத்திற்கேற்ப துண்டுகள்
போடவும்.

@ சுவையான அக்காரவடிசல் ரெடி.

குறிப்பு:
*********
பொதுவாக கோவில்களில் செய்யும் பொழுது துண்டுகள் போட மாட்டார்கள்அப்படியே சர்க்கரை பொங்கல் போல் தான் தருவார்கள்.நான் பார்ப்பதற்கு அழகாகஇருக்கும் என்பதால் துண்டுகள் போட்டுள்ளேன்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சுகர் ப்ரீ போட்டும் செய்யலாம்.அல்லதுகருப்பட்டியிலும் செய்யலாம்.கருப்பட்டியில் செய்தால் சுவை சற்று வித்யாசப்படும்.

விருப்பபட்டால் பால் கொதிக்கும் பொழுது ஏதேனும் ஒரு கலர் சேர்த்துகொள்ளலாம்.

தக்காளி சூப் மிக்ஸ் தயாரிக்கும் முறை


முழுவதுமாக பழுத்த கெட்டியான தக்காளிப் பழங்களை குழாயில் ஓடும் தண்ணீரில் நன்றாகக் கழுவவும். பின் இதனை சிறு துண்டுகளாக  வெட்டி தனி அறை உலர்த்தியில் 80 0 செல்சியஸில் 10 மணி நேரம் உலர்த்த வேண்டும். நீர் நீக்கம் செய்யப்பட்ட துண்டுகளை மின் அம்மியில் அரைத்து பொடியாக்க வேண்டும்
.
தக்காளி சூப் மிக்ஸ் தயாரிக்கும் முறை:

தேவையான பொருட்கள்:
தேவையான பொருட்கள்
அளவு
தக்காளிப் பொடி
5.0 கிராம்
வெங்காயப் பொடி
0.5 கிராம்
சோள மாவு
2.0 கிராம்
சீரகத் தூள்
0.5 கிராம்
மிளகுத் தூள்
0.3 கிராம்
உப்பு
1.5 கிராம்
அஜினமோட்டோ
0.5 கிராம்

செய்முறை:

அனைத்து தேவையான பொருட்களை நன்கு கலக்கி பாலித்தீன் பைகளில் மூட்டை கட்டவேண்டும்.

வெங்காயப் பொடியை தயாரிக்கும் முறை:
 
 பெரிய வெங்காயத்தை தேர்வு செய்து தோலை உறிக்கவும். பின் இதனை குழாயில் ஓடும் நீரில் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கவும். இதனை தனி அறை உலர்த்தியில் 60 0 செ 7 மணி நேரம் வரை வைத்து உலர்த்த வேண்டும். நீர் நீக்கம் செய்யப்பட்ட செதில்களை அரைத்து பொடியாக்கி பாலித்தீன் பைகளில் மூட்டைகட்டவும். 10 கிராம் செய்து வைத்திருந்த தக்காளி சூப் மிக்ஸை 150 மில்லி கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து நன்கு கிளறவும்.

வியாழன், 8 மே, 2014

கருப்பட்டி பொங்கல்




தேவையான பொருட்கள்:====================== 

கருப்பட்டி
 தூள் - ஒரு கப் 
அரிசி
 - ஒரு கப்பால் - மூன்று கப்தண்ணீர் - மூன்று கப்நெய் - கால் கப் 
ஏலக்காய்
 பொடி - கால் டீஸ்பூன் 
முந்திரி
 - நான்கு 
உலர்
 திராட்சை - ஒரு டீஸ்பூன்பாதாம் - நான்கு(விருப்பப்பட்டால்)பிஸ்தா - ஒரு டீஸ்பூன்(விருப்பபட்டால்)
செய்முறை: 
==========
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் இரண்டு கப் பால் மற்றும் அரிசி சேர்த்து நன்றாக வேக விடவும்.
இன்னொரு பாத்திரத்தில் கருப்பட்டி தூள் சேர்த்து கால் கப் தண்ணீர் சேர்த்துதணலை சிம்மில் வைத்து கம்பி பாகு காய்ச்சி கொள்ளவும்.(சாதம் லேசாக வேகஆரமித்ததும் பாகு காய்ச்ச ஆரமித்தால் போதும்..பாகு ஆனவுடனேயே சாதத்தில்சேர்த்து கிளறனும் இல்லாவிட்டால் பாகு இருக்கிப்போய்விடும்..)
பாத்திரத்தில் வேக வைத்த அரிசியை அடிக்கடி கிளறி விடவும். 

பாலும் தண்ணீரும் வற்றியவுடன் காய்சிய பாகை சேர்த்து நன்கு கிளறவும். 

மீதம் உள்ள ஒரு கப் பாலையும் சேர்த்து நன்கு கிளறவும்.

கொதிக்க ஆரமிக்கும்.

எடுத்து வைத்துள்ள நெய்யை பாதி பாதியாக சேர்த்து கிளறவும். 

எல்லாம் நன்றாக சேர்ந்து பொங்கல் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.

முந்திரி திராட்சை யை சேர்த்து கிளறவும்.
பாதாம் மற்றும் பிஸ்தாவை துருவி சேர்க்கவும்.

சுவையான கருப்பட்டி பொங்கல் தயார். 

குறிப்பு:
==========

பாகு சரியான பதம் வருவதற்கு எழு முதல் பத்து நிமிடங்கள் வரை ஆகும்.
(
சிம்மில் மட்டுமே வைக்கவும்) 

கருப்பட்டி
 சேர்த்து செய்வதால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் கொடுக்கலாம்.
நெய் வேண்டுமானால் அதிகமாக சேர்த்து கொள்ளலாம். 

இதை
 பற்றிய உங்களின் கருத்துகளை மறக்காமல் சொல்லிட்டு போங்க..

சனி, 3 மே, 2014

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (மதுரை பக்கம்)




தேவையான பொருட்கள்:
****************************
சின்ன கத்திரிக்காய் - ஐந்து
சின்ன வெங்காயம் - நான்கு
பச்சை மிளகாய் - மூன்று
புளி - ஒரு எலுமிச்சம்பழம் அளவு
பெருங்காயம் - வாசனைக்கு
நல்லெண்ணெய் - ஒரு குழிகரண்டி
கறிவேப்பிலை - தாளிப்பதற்கு
கொத்தமல்லி - தேவைக்கேற்ப
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - கால் டீஸ்பூன் (விருப்பபட்டால்)

வறுத்து பொடிக்க:
================
தனியா - ஆறு டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு - ஐந்து டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - மூன்று டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் - பதினொன்று (காரத்திற்கேற்ப)
பெருங்காயம் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
ஜீரகம் - ஒரு டீஸ்பூன்
தேங்காய் துருவல் - மூன்று டீஸ்பூன் (விருப்பபட்டால்)

மேலே கொடுத்துள்ள பொருட்களை ஒரு டீஸ்பூன் எண்ணெய்யில் வறுத்து நன்றாகபொடித்துக்கொள்ளவும்.காய்க்கு தேவையான அளவு மட்டும் உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும்.

செய்முறை:
*************

@ புளியை மூன்று அல்லது நான்கு டம்பளர் நீரில் கெட்டியாக
கரைத்துக்கொள்ளவும்.

@ கத்தரிக்காயை முழுதாக வெட்டாமல் காம்பு வரை நான்கு பாகமாக
அறுத்துக்கொள்ளவும்.

@ கத்தரிக்காயுள் பொடித்த பொடியை நன்றாக அமுக்கி நிரப்பி வைக்கவும்.

@ நிரப்பியது போக மீதமுள்ள பொடியை புளியுடன் சேர்த்து கரைக்கவும்.

@ ஒரு கடையில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை போட்டு
பொரியவிடவும்.
@ பின்பு வெங்காயம் மற்றும் கத்தரிக்காய் ,பச்சை மிளகாய் சேர்த்து அடுப்பு
தணலை மீடியமில் வைத்து கத்தரிக்காயை வேக விடவும்.

@ வெந்ததும் புளி கரைசலை ஊற்றி உப்பு மற்றும்கொத்தமல்லி,பெருங்காயம் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு எண்ணெய்கக்க ஆரமித்ததும் தேவைப்பட்டால் வெல்லம் சேர்த்து இறக்கவும்.
சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார்.செய்து பார்த்து 
கருத்தை
 பகிர்ந்து கொள்ளுங்கள்.