
தேவையான பொருட்கள்:
***************************
தண்ணீர் சேர்க்காத பால் - நாற்பது டேபிள்ஸ்பூன்.
அரிசி - ஒரு டேபிள்ஸ்பூன்
நெய் - ஆறு டேபிள்ஸ்பூன்
வெல்லம் - மூன்று டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - இரண்டு டேபிள்ஸ்பூன்
பிஸ்தா பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
முத்திரி - நான்கு டீஸ்பூன்
செய்முறை:
*************
@ முதலில் அடுப்பில் பால் மற்றும் அரிசியை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
@ நன்றாக கொதித்து வற்றி தக்காளி பதம் வந்ததும் மூன்று டேபிள்ஸ்பூன் நெய்மற்றும் வெல்லம்,சர்க்கரை,முந்திரி,பிஸ்தா சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம்நன்றாக கிளறவும்.
@ மீதம் உள்ள நெய்யை ஊற்றி கிளறி கேசரி பதம் வதும் நெய் தடவிய
தட்டில் இட்டு சமமாக பரப்பி ஆறியதும் விருப்பத்திற்கேற்ப துண்டுகள்
போடவும்.
@ சுவையான அக்காரவடிசல் ரெடி.
குறிப்பு:
*********
# பொதுவாக கோவில்களில் செய்யும் பொழுது துண்டுகள் போட மாட்டார்கள்அப்படியே சர்க்கரை பொங்கல் போல் தான் தருவார்கள்.நான் பார்ப்பதற்கு அழகாகஇருக்கும் என்பதால் துண்டுகள் போட்டுள்ளேன்.
# சர்க்கரை நோய் உள்ளவர்கள் சுகர் ப்ரீ போட்டும் செய்யலாம்.அல்லதுகருப்பட்டியிலும் செய்யலாம்.கருப்பட்டியில் செய்தால் சுவை சற்று வித்யாசப்படும்.
# விருப்பபட்டால் பால் கொதிக்கும் பொழுது ஏதேனும் ஒரு கலர் சேர்த்துகொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக