
தேவையான பொருட்கள்:
======================
வெண்டைக்காய் - நான்கு
கத்தரிக்காய் - ஒன்று
முருங்கைக்காய் - மூன்று துண்டுகள்
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு.
வெல்லம் - கோலிகுண்டு அளவு (விருப்பமென்றால்)
கறிவேப்பிலை - அரு ஆர்க்
பெருங்காயம் - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்
எண்ணெய்யில் வறுப்பதற்கு:
*******************************
நல்லெண்ணெய் - ஒரு குழிகரண்டி
தனியா - ஆறு டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு - மூன்று டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - ஆறு
வெந்தயம் -அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்
பெருங்காயம் - ஒரு டீஸ்பூன்
அரைத்துகொள்ள:
-----------------------
தேங்காய் துருவல் - ஒரு கப்
சிறிய தக்காளி - இரண்டு
தேங்காய் மற்றும் தக்காளியுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து மேலே வறுக்ககொடுத்துள்ள வற்றை வறுத்து எல்லாத்தையும் சேர்த்து மைய அரைத்து எடுத்துவைக்கவும்.
(பி.கு.எண்ணெய்யில் வறுத்த பொருட்களை அரைக்க சேர்க்கும் பொழுது வறுத்தஎண்ணெய்யுடன் சேர்த்தே சேர்க்க வேண்டும்.வடிகட்ட கூடாது )
வேகவைக்க:
___________
துவரம் பருப்பு - ஒரு பெரிய கப்
பாசி பருப்பு - கால் கப்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
தக்காளி - மூன்று துண்டுகள்
கறிவேப்பிலை - இரண்டு இலை
எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடிக்க:
..........................................................................
தனியா - இரண்டு டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்
கடைசியில் தாளிக்க:
---------------------------
தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவுமிளகாய் வற்றல் - இரண்டு
தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
==========
* முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை போட்டு வெடிக்கவிடவும்.
* நருக்கிய காய்கறிகளை போட்டு பெருங்காயம் போட்டு வதக்கவும்.
* உப்பு சேர்த்து ஒரு நிமிடம் சிம்மில் வைத்து வேக விடவும்.
* பின்பு புளியை ஒரு டம்பளர் நீரில் கரைத்து கடாயில் சேர்த்து காய்களை வேகவிடவும்.
* அரைக்க வேண்டியவற்றை வறுத்து அரைக்கவும்.
* காய்கள் வெந்து புளி பச்சை வாசனை போனதும் அரைத்த விழுதை சேர்த்துகுழம்பிற்கு தேவையான அளவு நீர் விட்டு கொதிக்க விடவும்.
* எல்லாம் ஒன்று சேர்ந்து கொதித்ததும் வேக வைத்துள்ள பருப்பு கலவையை நன்குமசித்து சாம்பாரில் சேர்த்து மேலும் தேவையான் அளவு நீர் விட்டு கொதிக்க விடவும்.
* பருப்பு சேர்த்ததும் ரொம்ப நேரம் கொதிக்க விட கூடாது..இரண்டு நிமிடத்தில்தணலை அனைத்து விடவும்.விருப்பப்பட்டால் சிறிது வெல்லம்சேர்க்கவும்.(வெல்லம் சேர்க்கும் பொழுது கவனமாக மிக சிறிய துண்டு மட்டுமேசேர்க்கவும்.இல்லையென்றால் இனிப்பாகிவிடும்.)
* பின்பு தாளிக்க கொடுத்துள்ளவற்றை வேறு பாத்திரத்தில் தாளித்து சாம்பாரில்சேர்க்கவும்.
* எண்ணெய் இல்லாமல் வறுக்க கொடுத்துள்ளவைகளை வறுத்து நன்கு பொடித்துஅதை குழம்பில் இரண்டு டீஸ்பூன் தூவி ஒரு நிமிடம் மூடி வைக்கவும்.கொத்தமல்லிதூவவும் .
* சுவையான சாம்பார் தயார்.
குறிப்பு:
======
இந்த முறையில் தான் கல்யாண வீடுகளில் மதியம் சாப்பாட்டிற்குசெய்கிறார்கள்..கொஞ்சம் அதிக வேலை தான்..ஆனால் சுவைத்து பார்க்கும் பொழுதுவேலை செய்த களைப்பு காணாமல் போய்விடும்...கண்டிப்பாக ஒரு முறை இப்படிசெய்து பாருங்க..
சூடான சாத்துடன் சிறிது நெய் சேர்த்து இந்த சாம்பாரை விட்டு பிசைந்துசாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.உங்களின் கருத்தை மறக்காமல்சொல்லிட்டு போங்க..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக